Tuesday, 3 January 2012

என் அறிமுகம்

அன்பு வலைப்பூ நண்பர்களே வணக்கம்.

 வலைப்பூவில் வண்ணத்துப்பூச்சி மொழி ஊடாக உங்களுடன் உரையாடவும், பகிர்ந்துகொள்ளவும் இதோ சிறகசைக்க துவங்கிவிட்டேன்.

வண்ணத்துப்பூச்சி மொழியில் பேசும் நான் இரா.மோகன்ராஜன் கடந்த பத்து வருடங்களாக அச்சு எழுத்து உலகில் இருந்து வருகிறேன்.

ஒரு படைப்பு  இலக்கியக்காரனாக என்னை அறிமுகப்படுத்தியது தினமணியில் முதல் பரிசு பெற்ற மின்மினியும் சில வண்ணத்துப்பூச்சிகளும் சிறுகதை. பின்னர் 7 ஆண்டுகள் நிலவொளி காலாண்டிதழ் பணி.

சாகித்திய அகதமி விருது பெற்ற பொன்னீலன் அண்ணாச்சியை நிலவொளி காலண்டிதழுக்காக நோ்கண்டது நூலாக வந்துள்ளது.

கீழத்தஞ்சை படைப்பாளிகள் சிறுகதை தொகுப்பான மின்மினியும் சில வண்ணத்துப்பூச்சிகளும் அகரம் பதிப்பில் நூல் தலைப்பில் மீண்டும் அச்சிறுகதை வெளியாகி உள்ளது.

சிறு பத்திரிகை உலகின் அதே தீவிரத்தோடு வலைப்பூவில் அமர்கிறேன்.

உங்கள்,
இரா.மோகன்ராஜன்

No comments:

Post a Comment